Wednesday, September 29, 2010

' தமையன்'

வந்ததிலும் வாழ்ந்ததிலும்
எனக்குமுன்  நீ இருக்க,
எனக்கேது கவலைகள்
என் அருமை சகோதரா?

தந்தையை உன்னில் காண
தாய்- பாசம் கண்கள் சொல்ல
என்ன தவம் செய்தேனோ
உன் அரவணைப்பின் அருமைக்கு ?

குற்றங்கள் செய்தபோது
தாய் என்னை அடித்திட,
தந்தை என்னை கண்டிக்க
என் மனம் நீயே அறிந்திடுவாய் .


தவறுகள்  நீ  செய்து  
தண்டனை  வாங்குகையில் ,  
உன்னை  நான்  கண்டு  
பாடங்கள்  படித்தேனே . 

குறும்புகள் செய்த போதும்
அரும்பென என்னை மன்னிக்க,அன்புள்ளமே
கண்ணோரம் நீர் வந்தது
 நினைவுகளை நினைத்திடவே .

இன்னொரு பிறவி இருப்பின்
உனக்கே நான் தங்கையாக;
மறித்தாலும்  பிறந்திடுவேன்
உனக்கே நான் சேயாக.



No comments:

Post a Comment