Thursday, September 23, 2010

மறத்தல் ஆகுமோ ?

புவியிலே தாயை புகழ 
நல்லோர் நிறம்பி இருக்க ,
தந்தையை மறந்ததேனோ  
என் அன்புள்ள சகோதரனே ?

தந்தையின்றி இங்கு 
தாயில்லை புவியினிலே ,
தாங்கிய தோள்களின்றி
பூந்தோட்டம் வாழ்ந்திடுமோ ?

பாலூட்டி சோறூட்டி 
தாய் பறவை அரவணைக்க ,
பறந்தோடி கொணருமே
தாய்க்குமே வயிறார .

தாயோடு சேயையுமே 
காக்கும் அரண் இங்கிருக்க ,
நம் தந்தையை மறந்ததேனோ  
என் இனிய சகோதரனே ?





No comments:

Post a Comment