புவியிலே தாயை புகழ
நல்லோர் நிறம்பி இருக்க ,
தந்தையை மறந்ததேனோ
என் அன்புள்ள சகோதரனே ?
தந்தையின்றி இங்கு
பூந்தோட்டம் வாழ்ந்திடுமோ ?
பாலூட்டி சோறூட்டி
தாய் பறவை அரவணைக்க ,
பறந்தோடி கொணருமே
தாய்க்குமே வயிறார .
தாயோடு சேயையுமே
காக்கும் அரண் இங்கிருக்க ,
நம் தந்தையை மறந்ததேனோ
காக்கும் அரண் இங்கிருக்க ,
நம் தந்தையை மறந்ததேனோ
என் இனிய சகோதரனே ?

No comments:
Post a Comment