Friday, September 10, 2010

இறுதி ஊர்வலம்





வழிநெடுகே பூக்கள், 

மனம் ரசிக்கவில்லை;
என் உறவின் இறுதி ஊர்வலம் .



                                                     
காலமெல்லாம் காத்திருந்திருப்பேன், 
இன்று  என் காதலின்  இறுதி ஊர்வலம் ;
உன் மண நாள். 



வாயில் அரிசியும் பாலும் ஊற்றி, 
தம்பட்டமான இறுதி ஊர்வலம் ;
தூவிய பூக்களுக்கும் தான். 


நிகழ்வுகளின் நிறங்கள் வெவ்வேறு , 
அவற்றின் சாட்சிகளும் அப்படியே ; 
பூக்கள்! 






No comments:

Post a Comment