Friday, September 17, 2010

'தொட்டில்'


சின்னதோர் மின்மினி, தோட்டத்தில் விளையாட,
என்னை நான் மறந்தேன் சில நொடி.

கால் தட்டி விழுந்ததோ - என் செல்லம்,
நீ அழும்பொழுதும் , ரசிக்கவே தோன்றும்.

ஓடி வந்து அணைத்தது என்னை - என் பிம்பம்,
உலகத்தில் எவ்வளவு எவ்வளவோ இன்பம்?

எவன் சொன்னது 'உலகம் ஒரு மாயை'?
அவனோ மழலை இன்பம் தெரியாதொரு பேதை.

கடவுளை நித்தம் காண்கிறேன் , என் வீட்டில்
என் வாழ்கையை நிறைத்தது - என் தொட்டில்.





1 comment: