சின்னதோர் மின்மினி, தோட்டத்தில் விளையாட,
என்னை நான் மறந்தேன் சில நொடி.
கால் தட்டி விழுந்ததோ - என் செல்லம்,
நீ அழும்பொழுதும் , ரசிக்கவே தோன்றும்.
ஓடி வந்து அணைத்தது என்னை - என் பிம்பம்,
உலகத்தில் எவ்வளவு எவ்வளவோ இன்பம்?
எவன் சொன்னது 'உலகம் ஒரு மாயை'?
அவனோ மழலை இன்பம் தெரியாதொரு பேதை.
கடவுளை நித்தம் காண்கிறேன் , என் வீட்டில்

amazing ! pullarikuthu ponga ! Ash
ReplyDelete