Tuesday, October 5, 2010

உயிர் பேசும் நேரம் !


வந்தவனை கண்டவுடன் ,
கொண்டவன் இவன்தானோ 
என மனம் கேட்டதை ;
யார் கேட்டது?


வெட்கி நான் நாண
கண்களின் ஓரம் வந்த ஈரம்
அது சொன்னது :
எனக்குள் நான் பூத்ததை .


சுற்றமெல்லாம் சூழ ,
அச்சாரங்கள்  பேச ,
என் கண்களின் அந்த தேடலை 
என்னவென்று சொல்ல ?


வாழ்கை எனும் பயணம்
இனி ஒன்னோடு தானென்று 
இப்பெண்ணின் மன கூச்சலை 
யாரோ  கேட்டு  ரசித்தது -
 நீதானோ?
என் உயிரே !

No comments:

Post a Comment