அவள் கண்கள் என்னை பார்த்ததும்
மண் பார்த்தது ஏனோ?
உன்னில் வெட்கமோ?
நாணமோ?
என் மனதின் ஓசை கேட்டதா ?
பின் ஏன் இந்த மௌனம்?
என்னை அது கொல்லும் -
என் விரகமோ?
தாபமோ?
என் வாழ்க்கையில் நீ வந்தாய் ,
பூத்தது என் நந்தவனம் -
நீ யாரோ ?
என் தாயோ?
தாரமோ?
கடவுளை நான் வணகியதில்லை
உன்னை பார்க்கும் வரை -
இப்பொழுது வேண்டினேன் .
நன்றி சொல்லவா?
ஆயுள் நீளவா?

post a haiku like neerin kaal thadangal
ReplyDelete