Tuesday, October 5, 2010

'மனையாள்!'

அவள் கண்கள் என்னை பார்த்ததும்
மண் பார்த்தது ஏனோ?
உன்னில் வெட்கமோ?
நாணமோ?

என் மனதின்  ஓசை கேட்டதா ?
பின் ஏன் இந்த மௌனம்?
என்னை அது கொல்லும் -
என் விரகமோ?
தாபமோ?

என் வாழ்க்கையில் நீ வந்தாய் ,
பூத்தது என் நந்தவனம் -
நீ யாரோ ?
என் தாயோ?
 தாரமோ?

கடவுளை நான் வணகியதில்லை
உன்னை பார்க்கும் வரை -
இப்பொழுது வேண்டினேன் .
நன்றி சொல்லவா?
ஆயுள் நீளவா?

1 comment: