நிறங்கள்
Friday, September 10, 2010
இறுதி ஊர்வலம்
வழிநெடுகே பூக்கள்,
மனம் ரசிக்கவில்லை;
என் உறவின் இறுதி ஊர்வலம் .
காலமெல்லாம் காத்திருந்திருப்பேன்,
இன்று என் காதலின் இறுதி ஊர்வலம் ;
உன் மண நாள்.
வாயில் அரிசியும் பாலும் ஊற்றி,
தம்பட்டமான இறுதி ஊர்வலம் ;
தூவிய பூக்களுக்கும் தான்.
நிகழ்வுகளின் நிறங்கள்
வெவ்வேறு ,
அவற்றின் சாட்சிகளும் அப்படியே ;
பூக்கள்!
Thursday, September 9, 2010
நீரின் கால்தடங்கள்
பேய்ந்து முடிந்தது ,
ஜோ! வென மழை,
சந்தோஷத்தில் என் மனம் குதிகுதோ,
அட! தவளைகள்.
ஆளில்லா காட்டிலேயும்
பாசத்தை பொழியும் தாய்:
அழகான அருவி!
கண்ணுக்குள் கண்ணாடி,
கருணை பெருக்கு,
கண்ணீர் !
Wednesday, September 8, 2010
'குட்டி வானவில்'
வானவில்லின் நிறங்கள் எவ்வளவு அழகு !
மனிதன் படைத்த எந்த பொருளும்
வானவில்லைபோல் வர்ணஜாலம் செய்வதில்லை .
இப்படி நினைத்துகொண்டே இருக்கும் பொழுது,
என் கைமேல் ஒரு குட்டி வானவில் : வண்ணதிபூச்சி,
வந்து உட்கார்ந்தது சிலாகிப்பாக .
அதை தொட்டு பார்த்தேன் ,என்ன அதிசயம் !
அதன் நிறங்கள் என்னோடு ஒட்டி கொண்டது .
நானும் அழகானேன் .
Tuesday, August 24, 2010
வணக்கம்
இந்த வலை பக்கம் என்னுடைய புதிய முயற்சி.
இதில் நான் வெற்றி பெற கடவுளையும் உங்களையும் வேண்டி ஆரம்பிக்கிறேன்.
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)