Sunday, November 14, 2010

சோகமான என் காதலே!

காலங்களை சுகமாக்க நினைத்தேன்   
நீயும் நினைத்தாய் -
என் கைக்குட்டையை !

உன்னை  வாஞ்சையாக பார்க்க,
உன் கண்களில் கோபத்தீ- 
அணைத்தேன் என் கண்ணீரால்!

உன் வார்த்தைகள் கொல்ல ,
நான் என்ன சொல்ல ;
மௌனமே என் மொழியானது . 

வருவதும் போவதும் வாழ்க்கையில் சகஜமாம் -
எதை சொன்னார்கள் ?
பெண்ணின் காதலா  ? 

நான் வாடினேன் உன் நினைவில் 
நீ ஓடினாய் பல கனவில் -
அமேரிக்க மாப்பிள்ளை !